உறவுகள் மேம்பட
நம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது நம்முடனே வாழும் உறவுகளிடம் அவர்களிடம் உள்ள குறைகளை காணாமல் பெரிது படுத்தாமல் அன்பு செலுத்தி அரவணைத்துச் செல்ல வேண்டும். விட்டுக் கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் விடாமுயற்சியோடு கூடிய ஆத்மார்த்தமான அன்பு புரிதலும் இதய பூர்வமாக நேசித்தலும் குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
- முதலில் நான் என்ற அகந்தையை விட்டொழியுங்கள்.
- அர்தம்மில்லாமலும் , பின் விளைவுகள் பற்றி அறியாமலும் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது.
- பிரச்சனைகளை யதார்த்தமாக கையாளுங்கள்.
- பல நேரங்களில் சங்கடங்களை சகித்துக் கொள்ள தான் வேண்டும் என்பதை உணருங்கள்.
- மற்றவர்களுக்குரிய மரியாதையை தர தவறாதீர்கள்.
- புன்முறுவல் காட்டவும், இதமான சொற்களை பேசவும் தயக்கம் கூடாது.
- விட்டுக் கொடுத்து வாழுங்கள் அப்படி முடியவில்லை எனில் புறம் பேசாமல் ஒதுங்கி விடுங்கள்.
பொதுவாக:
நல் உறவாக இருந்தால் யாராக இருந்தாலும் ஒரு காலக் கட்டத்தில் உங்களை புரிந்துக் கொள்வார்கள்.
நாம் எப்படி இருக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அப்படியே மற்றவர்களை எண்ணுவோம்.இதுவே நம் உன்னதமான வாழ்வுக்கு ஆதாரமாக அமையும்.
Comments
Post a Comment