கோவில்கள்
கோவில்கள் எண்ணில் அடங்கா... ஒவ்வொரு கோவிலும் அற்புதங்கள் பல கொண்டுள்ளது .
கோவில்களை பார்க்கும் போது அந்த காலங்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் கட்டிட வல்லுனர்கள் எப்படி உருவாக்கினார்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது.
கோவில்களில் உள்ள கோபுரங்களிலும் மேற்கூரைகளிலும் தூண்களிலும் எவ்வளவு வேலைப்பாடுகள்!
கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் பார்த்திருப்போம். ஒவ்வொரு தூணிலும் தட்ட ஒவ்வொரு ஓசை. ஒன்று போல் மற்றொன்று சிறிதளவும் வேறுபாடில்லாமல் எப்படி?
எத்துணை எத்துணை கோவில்கள் அத்தனை கோவில்களிலும் ப்ரதான வேலைப்பாடுகளை பார்க்கும் போது உருவாக்கிய அத்தனை பேருக்கும் திறமை இருக்க வேண்டும் அல்லவா ?
இறைவனை உணர்வு பூர்வமாக உணர்ந்திருந்தால் மட்டுமே இப்படி ஆலயங்களை கட்டி உருவாக்க முடியும்.
ஈடுபாடும் பக்தியும் இல்லாமல் இப்படி வியக்கத்தக்க அளவில் கோவில்களை உருவாக்க முடியாது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இனி வரும் காலங்களில் ஒவ்வொருவரும் பக்தி என்ற அனுபவத்தை கோவில்களில் உணர வேண்டும் என்று ஆங்காங்கே கோவில்கள் கட்டி இருப்பார்கள் போல.
நாமும் அதை உணர்ந்து அவர்களின் அந்த மகத்தான உன்னதமான பணியினை புனிதமாக போற்றுவோம். இறை ஆலயங்களை பாதுகாப்போம். வணங்குவோம்.
நமக்கு அடுத்த தலைமுறையினருக்கும் கோவில்களின் மகத்துவத்தை உணர்த்துவோம்.
ஆன்மா + லயம் = ஆலயம்.
நமக்காக ஆலயம் உருவாக்கி தந்தவர்களுக்கு நன்றி சொல்லுவோம் - நாமும், நம் தலைமுறைகளும்.
அடுத்து::பரிகாரங்கள் காண்போம்
Comments
Post a Comment