Posts

Showing posts from 2018

சந்ததி வளர , விருத்தி அடைய:

Image
சந்ததி  வளர  , விருத்தி  அடைய: செய்யவேண்டியது:            ஒரு  வெள்ளிக்கிழமை யில்  [108] நூற்றியெட்டு  சிவப்பு  செம்பருத்தி  பூக்களை   மாலையாகக்  கட்டி  மங்களாம்பாளுக்கு சாற்றி  ஒரு  தடவை  அர்ச்சித்தால்  போதும்.                               சந்தான  பாக்கியம்  வாழையடி  வாழையாக  தொடரும்.              இது  உண்மையிலும்  உண்மை.  செய்து  பயனடையுங்கள்.                                       மன நிறைவு  அடையுங்கள்.   அடுத்து:: சிந்தனைக்கு 

சித்திரை மாதம் ஞாயிறு அன்று குழந்தை பிறந்தால் :

Image
மீண்டும் ஓர் பரிகாரம்: சித்திரை   மாதம்  ஞாயிறு  அன்று குழந்தை  பிறந்தால் : செய்யவேண்டியது : குழந்தை க்கு: ஞாயிறு  அன்று  -   எண்ணெய்  ஸ்நானம்                                                            கூடாது.                                             முடி  வெட்டக்கூடாது.                                               நகமும் வெட்டக்கூடாது. குறிப்பாக :  ஞாயிறன்று  தாயும்  சேயும்  அசைவம்  சாப்பிடக் கூடாது. வழிபாடு :                                         சூரிய  பகவானை  தினமும்  வழிபட  வேண்டும்.                     சூரிய  காயத்ரி  தவறாமல்  சொல்ல  வேண்டும். வருடத்திற்கு  ஒருமுறை:                    திருப்பதி  சென்று   பெருமாளை  தரிசித்து  வரவும்.                   குழந்தை  வளர்ந்த  பின்னர்  அவர்களே  இந்த   பரிகாரங்களை தன்னிச்சையாக  செய்யும்படி  பழக்க  வேண்டும்.                 இப்படி  செய்தால்  அந்த  குழந்தையின்  எதிர்காலம்  மிகச்  சிறப்பாக   இருக்கும்   என்கிறது  சாஸ்திரம்.                    சித்திரை  மாதம்  கத்திரியில்  பிறந்தாலும்  இந்த  பர

தானம் -- தர்மம்

Image
தானம்:         தானம்  என்பது  மற்றவர்களுக்கு  அள்ளி   அள்ளி   கொடுப்பது. உதாரணம் : கர்ணன் :                 தன்னிடம்  வருவோர்க்கு  இல்லை  என்று  கூறாமல்  தானம்  செய்து  சரித்திரத்தில்  கொடை  வள்ளல்  என  நீங்கா  பெயர் பெற்று  தானத்திற்கு  கர்ணனே    சான்று  என்று  வாழ்ந்து  காட்டியவர். தர்மம் [ அறம் ]: உதாரணம்: யுதிஷ்டிரன் [ தர்ம  மகாராஜா ]  பாண்டவர்களில்  மூத்தவர்.            அறத்தின்  வழி  வாழ்ந்து  காட்டியவர்.               தர்மம்  --  வடமொழிச்  சொல்             அறம்    --   தமிழ்ச்  சொல்.            வாழ்க்கையில்  தர்மத்தை  கடைபிடித்து  இறுதி  வரை  அறநெறி  தவறாமல்  வாழ்ந்தவர்.             யுதிஷ்டிரர்-  சூதாட்டத்தில்  தோல்வி  பெற்று   [ வஞ்சகத்தால் ]  அஸ்தினாபுரத்தை  விட்டு  துரியோதனன்  காண்டவ  வனம்  என்னும்  வறண்ட  பூமிக்கு  போக உத்தரவிட்டதும்  மௌனமாக  ஏற்றுக்கொண்டார்.              பாண்டவர்கள்  நால்வரும்  சாபம், சபதம்  செய்த  போதும்  ஒரு  வார்த்தையும் [ கடுஞ்சொல் கூட ] பேசாதவர். கிருஷ்ணர்  தூதுவராக  போக  முற்படும்  போதும்  போர்  வேண்டாம்  ஐந்து  கிரா

தொடர் வியாதி -- பரிகாரங்கள்

Image
தொடர்  வியாதியால்  துன்பப்  படுபவர்களுக்கு  எளிய  பரிகாரங்கள்:                 உங்கள்   மனம்  அமைதியாக  இருக்க  முயற்சி  செய்யுங்கள்.             உங்களுக்கு  வியாதி  இருக்கிறது  என்பதை  மறந்து விடுங்கள்.            கண்ணாடியில்  உங்கள்  உருவத்தைப்  பார்த்து  நான்  உன்னை  மிகவும்  நேசிக்கிறேன்.  இந்த  சரீரத்தில்  இருக்கும்  உயிரான  நீ  எப்போதும்  என்னில்  மகிழ்ச்சியாக  இருக்க  வேண்டும்.  என்  உடலானது  என்னுள்  இருக்கும்  இந்த  உயிரைப்  போற்றி  பாதுகாக்கும்  என்று  சொல்லுங்கள்.              உங்களுக்கு  எது கிடைக்கவில்லையோ  அவற்றை  எண்ணி  வருந்தாமல்  அந்த  எண்ணத்தை  தொலைத்துவிடுங்கள் .              வீட்டில்  காலை மாலை  பூஜை  அறையிலும்  வாசலிலும்  வரவேற்பு அறையிலும்  விளக்குகள்  ஏற்றுங்கள் .             தன்வந்தரி  ஸ்தோத்திரம் தவறாது சொல்லுங்கள்.            மரண பயம்  வந்துவிட்டால்  மிருத்யுஞ்ஜய  மந்திர த்தை 108 முறை சொல்லுங்கள் அல்லது  கேளுங்கள்.           கண்டிப்பாக த்யானம் செய்யுங்கள்            நவகிரஹ   பரிகாரங்கள், அர்ச்சனை,  வலம் 

தன்வந்த்ரி [ மருத்துவக் கடவுள்]

Image
இவர் -  வியாதிகளைப்  போக்குவதற்க்கென்றே  இப்பெயரைக்  கொண்டு  அழைக்கிறோம். கர்மா --  வினைப்பயன் :            சிலருக்கு  எப்போதும்  ஏதேனும்  ஒன்று  சரீரத்திற்கு  [வியாதி] வந்துக்  கொண்டே  இருக்கும்.  மருத்துவமும்  தொடர்ந்து  பார்த்துக்  கொண்டே  இருப்போம்.  இந்த  மருத்துவம்  சரியில்லை  வேறு  மருத்துவம்  என்று  இப்படி  நம்மை  மாற்றிக்  கொண்டே  இருப்போம்.             இதற்க்கு  தீர்வு  பரிகாரங்கள்  இறை  நம்பிக்கையில்  குணம் பெறலாம்.  ஏதேனும்  ஒரு  வழி  எந்த  விதத்திலாவது  உங்களைத்  தேடி  வரும்.  தன்வந்தரி  ஸ்தோத்திரம்: ஓம்  நமோ  பகவதே  வாசுதேவாய  தன்வந்த்ரயே  அம்ருத  கலச  ஹஸ்தாய  ஸர்வாமய  வினாசனாய  த்ரைலோக்ய  நாதாய  ஸ்ரீ  மஹா  விஷ்ணுவே  நமஹ: என்று  108 முறை  சொல்லுங்கள் [அ]  கேளுங்கள். தன்வந்தரி  மந்திரம்: " ஓம்  நமோ  பகவதே  மஹா  சுதர்ஸனா  வஸுதேவாய   தன்வந்த்ரயே அம்ருத  கலச  ஹஸ்தாய ஸர்வ  பய  வினாஸய ஸர்வ   ரோக  நிவாரண்ய  த்ரை   லோக்ய   பதயே  த்ரை   லோக்ய   நிதயே  ஸ்ரீ  மஹா  விஷ்ணு  ஸ்வரூப  ஸ்ரீ  தன்வந்தரி  ஸ்வரூப  ஸ்ரீ   ஸ்ரீ   ஸ்ரீ  

தமிழின் பெருமை

Image
சில  துளிகள்: " யாமறிந்த  மொழிகளிலே  தமிழ்  மொழிப்   போல்   இனிதாகிலும்  எங்கும்  காணோம்."            சங்கத்  தமிழ்  புலவர்களின்  புலமைகளை  அவர்கள்  இயற்றிய  நூல்களில்  நமக்கு  முழுவதும்  கிடைக்கவில்லை  என்றே  அறிகிறோம்.              ஓலை  சுவடிகளில்  வடிக்கப்  பெற்று  நமக்கு  இவ்வளவும்  கிடைக்க  பெற்றதே  நம்  பாக்கியம்.             இதையும்  நம்  தமிழுக்கு  தமிழ்  மண்ணுக்கு  சான்றாக  பெருமை  என  போற்றுவோம்.             தமிழ்  மொழி  சாகா  வரம்  பெற  வேண்டும்  என்பதே  தமிழ்  கற்றவர்களின்  அவா.   தமிழ்  --  அமிர்தம்  மூத்த  மொழி-- தமிழ்  இயல்,  இசை,  நாடகம்  என  இதனுள்  அடங்கும்.   பைந்தமிழ்,  தீந்தமிழ்,  அழகுத்தமிழ்  எனத்  தமிழோடு  புலவர்கள்  கவிநயம்  புனைந்து  மகிழ்வார்கள்.  தமிழ்  மொழிக்கு  நிகர் -- தமிழே  மொழிகளில்  முதன்மையான  மொழியும்  தமிழ்  படித்ததில்  கிடைத்த  தகவல்:          2000 ஆண்டுகளுக்கு  முன்பு  தோன்றிய  மொழி -- உலக மொழி          20000   ஆண்டுகளுக்கு  முன்பே  தோன்றிய  மொழி -- தமிழ்            20000  ஆண்டுகளுக்கு  மு

புலவர்கள்

Image
                  புலவர்கள் இறைவனை  வேண்டும்  போது  தமிழ்  மொழி  இரட்டிப்பு  அழகாகும்.  எதுகை - மோனை துள்ளி  விளையாடும்.                      கம்பர்  வரிசையில்  வள்ளுவர்,  தாயுமானவர்,  நக்கீரர்,  இளங்கோவடிகள்,  சீத்தலைச்  சாத்தனார்,  கோப்பெருந்தேவி  இப்படி  எண்ணிலடங்கா  புலவர்கள்  தமிழுக்குச்  சான்றாக  இருக்கிறார்கள். தாயுமானவர் --  இறைவனை  வேண்டும்  போது       பக்தி  நீ  பக்தி  காண  பலனா  நீ  பலவாச்   சொல்லும்  ஸித்தி   நீ  ஸித்தர்  காணா   திறமும்  நீ  திறமோர்  காணா   முக்தி  நீ  முக்தி  காணா   முதலும்  நீ  முதன்மையான  புத்தி   எனக்கொன்றுண்டோ  பூரானந்த   வாழ்வே  என்று   இறைஞ்சுகிறார்  இறைவனிடம். அடுத்து::தமிழின் பெருமை 

முடியாத காரியங்களை தடையின்றி முடிக்க

Image
முடியாத  காரியங்களை  தடையின்றி  முடிக்க :           இது  படித்ததில்  கிடைத்த  தகவல். எளிமையானது  பயன்  பெறுங்கள்.                       தொடர்ந்து  ஒன்பது   செவ்வாய்க்கிழமை களில்  மதியம்  1.00 -- 1.15   தொடங்கி  2.00 மணிக்குள்  செவ்வாய்  ஓரையில்  ஆஞ்சநேயர்   படத்தை  வைத்து  ஒன்பது  மண்  அகலில்  சிகப்பு  திரி  கொண்டு  விளக்கேற்றி,  ஒவ்வொரு  விளக்கிலும்  ஒரு  மிளகு  இட்டு  நெய்  தீபம்  ஏற்றி  உருளைக்கிழங்கு  வேக  வைத்து  நிவேதனமும் ,  பால்  பாயசமும்  செய்து  தூப  தீப  ஆராதனைகள்  காட்டி  தேங்காய்  உடைத்து  வழிபட்டு  வாருங்கள்.                விரதம்  இருப்பவர்கள்  சிவப்பு  நிறத்தில்  உடைகள்  அணிவது  சிறப்பு.               உண்ணா  நோன்பு  இருந்து  விரதம்  முடிக்க  வேண்டும்.                ஒன்பது  வாரம்  முடிந்த  பிறகு  ஆஞ்சநேயர்  கோவிலுக்கு  சென்று  வெற்றிலை  மாலை  போட்டு  உங்கள்  பெயருக்கு  அர்ச்சனை  செய்துவிட்டு வாருங்கள்.                முடிந்தவர்கள்  ஒன்பது  பேருக்கு  நெய்யுடன்  மிளகும்  உப்பும்  சேர்த்து  அதனுடன்  சாதத்தைக்  கலந்து  உருளைக்  கிழங்கு பொரி

இராமாயணம்

Image
இராமாயணம் பலன் [சுருக்கம்]            ஓம்  ஸ்ரீ  இராம  ராம  இராமேதி  ரமே  இராமே  மனோரமே  ஸகஸ்ரநாம  தத்துல்யம்  ஸ்ரீ இராம  நாம  வராணனே ! இந்த  மந்திரத்தை  தினம் தினம் சொல்லிக்  கொண்டிருந்தாலே  இராமாயணம்  முழுவதும்  படித்ததற்கு  நிகராக  கொள்ளலாம். இராமர் வடிவம் [ கம்பர் இராமாயணத்தில்]: இராமரும் -- கம்பரும்: தோள்  கண்டார்  தோளே  கண்டார்   தொடு கழல்  கமலம்  அன்னத்  தாள்  கண்டார்  தாளே   கண்டார்   தடக்கைக்  கண்டாரும்   அஃதே  வாள்   கொண்ட  கண்ணார்  யாரே  வடிவினை  முடியக்  கண்டார்  ஊழ்  கொண்ட  சமயத்தன்னார்  உருவு  கண்டாரை  ஒத்தர்  எனக்  கூறும்  கம்பனின்  வரிகள்  தமிழ்க் கற்றோர்க்கு  அமுதம். மேலும்  இராமாயணம்  என்னும்  மகா  இதிகாசத்தில்  கம்பர், தனது  பட்டந்தனை தம்பியர்க்கு  ஈயெனத்  தந்து  மகிழும்  தமையனும், தமையனார்  வருமளவு  மாவிரதமாகவே  தபஸ்  புரியும்  தம்பியும், கனதனப்   பாலீய்ந்த   தாய்தனைப்  போல  கருணை  செய்திடும்  மதனியும், காணுமுன்  தந்தைபோல்  திருவடிகள்  பணியும்  கனிட்டவனுடைய  மனையாட்டியும், தினம்  தினம்  பரிவாகி  அம்மைய

பகவத் கீதை

Image
பகவத் கீதை சாராம்சம்: கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. என்பதே..        எதை  இழந்தாலும் இழந்ததை நினைத்து வருத்தப்படாதே  அது  நியாயமாக  உனக்குச்  சேரவேண்டியதென்றால்  அது  இன்னொரு  வடிவில்  உன்னை  வந்து  சேரும். பகவத் கீதை சுருக்கம்:            கீதா,  கீதா  (Geedha ,  G eedha ) என்று பத்து  முறை தொடர்ச்சியாக  மெய்மறந்து  சொல்லிக்  கொண்டே இருங்கள்.            அது  தியாகி, தியாகி  என்றே  ஒலிப்பதை  உணர்வீர்கள். தியாகத்தின்  வடிவம்  ஸ்ரீ கிருஷ்ணர்.   கீதா என்ற சொல்லின் எழுத்துக்களை  மாற்றி  உச்சரித்தாலும்  தாகீ ( தியாகி ).              பகவத் கீதையைப்  பாராயணம்  செய்வதற்கு  நிகராகக்  கருதப்படுகிறது.                யோக  மாயையால்  நன்கு  மறைக்கப்பட்டு  உள்ள  இறைவனை  ஞானிகளால்  மட்டுமே  உணர  முடியும்.    அடுத்து::இராமாயணம்  

தேவி இந்திராக்ஷி

Image
          இந்திராக்ஷீம் துதியை தினமும் பாராயணம் செய்து வர  நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும், காய்ச்சல் குணமாகும். மந்திரங்கள்: இந்திராக்ஷீம் யுவதீம் தேவீம்  நானாலங்கார  பூஷிதாம்  ப்ரசன்னவதனாம்  போஜாமப்ஸ ரோகண  ஸேவிதாம்த்  விபூஜாம்  சௌம்யவதனாம்  பாஸாங்குஸதராம் பராம்த்ரைலோக்ய  மோஹினீம்   தேவிமிந்திராக்ஷீ  நாம கீர்திதாம்    அடுத்து::பகவத் கீதை  

பாவம் -- புண்ணியம்

Image
பாவம்               நாம் நம்மை அறியாமலே பாவமும், புண்ணியமும் செய்து கொண்டே இருப்போம்.  நில்லாப்  பிழையும் ,  நினையாப் பிழையும்   கல்லாப்  பிழையும்,  கருதாப்  பிழையும்,  சொல்லாப்  பிழையும், துதியாப்  பிழையும், தொழாப்  பிழையும், எல்லாப்  பிழையும் நம்மை அறியாமல் நிகழும். புண்ணியம்                  நாம் அறியாமல் நிகழாது.  நாம்  புண்ணியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  ஆழமாக  வரவேண்டும்.  சொல்லால், மனத்தால், எண்ணத்தால்,  நினைவுகளால்,  செயலால்... பாவத்தின் பலன்                    அது செய்வோரை மட்டுமே அழிக்கும்.  வேறு  யாரிடமும்  செல்லாது.  எத்தனை, எத்தனை  பிறவிகள்  எடுத்தாலும் அது செய்தவரை  மட்டுமே பல மடங்காக பெருகி  சென்றடையும்.                    பாவக்கணக்கு  பெருகி கொண்டே போனால்  பிறவிகள் தோறும் அல்லல்பட்டு வீழ்வோம் என்பதனால் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும், அறியாமலும்  கூட சிறு பாவமும் செய்யாமல் இருக்க முயற்சிப்போம். புண்ணிய கணக்கு :                    நாம் செய்யும் சிறு புண்ணியமும்  பல்  மடங்காக  பெருகி நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் , நம்  தலைமுறையினருக

பொய்மை -- வாய்மை

Image
ஹரிச்சந்திரா   பொய்மை -- வாய்மை [ சத்தியம், உண்மை]: பொய்                                                  துஷ்பிரயோகம்                             அதிகாரம்                                          சத்தம்                                                    சபை  ஏறும்                                      வேகமாக  பரவும்                                                    படு தோல்வி    அடையும்                                                                              வாய்மை அடக்கம் நிதானம்  மென்மை  சபை  ஏறாது  இருக்கும்  இடத்திலேயே  இருக்கும் ஜெயம்  மட்டுமே   அடையும். பொய்மை:                பொய்  என்றும்  வாய்மையிடம் [சத்தியத்திடம் ]  தோற்றுப்  போகும்.                முதலில்  வெற்றி  பெறுவது  போல்  தோன்றும்  ஆனால்  இறுதியில்  நீர்குமிழ்   போல்  மறைந்து விடும்.  இருக்கும்  தடம்  தெரியாமல்  போய்விடும். சத்தியம்:                 சத்தியம்  தோற்பது  போல்  வெகு  நிதானமாகத்  தான்  கடக்கும்.                 இறு

திருமணம் இனிதே நடைபெற

Image
திருமணம் இனிதே நடைபெற :                         வெள்ளிக் கிழமை இராகு காலத்தில் பூஜையைச் செய்தல் வேண்டும்.  அன்று தலைக்கு  குளித்து  தூய  ஆடை  உடுத்தி  பூஜை  அறையையும், வீட்டையும்  தூய்மைப்  படுத்த வேண்டும்.  விளக்குகள்  ஏற்றி  வைத்து  அழகு  படுத்த  வேண்டும்.   பூஜைக்கு  ஒரு  தாம்பாளத்தில்  அரிசி  வைத்து  அதன்  மேல்  கலசம்  வைக்க  வேண்டும்.  கலச  சொம்பில்  தண்ணீர்  ஊற்றி  சிறிது  மஞ்சளிட்டு  அதில்  நாணயம்  இடலாம்.  மாவிலை  [9]  எண்ணிக்கையில்  வைத்து  அதன்  மேல்  கலச  தேங்காய்  வைக்கவும்.  நாரோடு  கூடிய  தேங்காய்  அதற்கு  மஞ்சள்  பூசி  குங்குமம்  வைத்து  பூக்களால்  அலங்கரித்து  இரு  பக்கமும்  குத்துவிளக்கு  ஏற்றி  விடவும்.  பின்  தளிகை  [வெல்லம்  அரிசியால் ]  செய்து வாழை இலையில்  வைத்து  பூஜையை  சரியாக  10.40 am  க்கு  இராகு காலத்தில்  தொடங்கவும்.                தூப  தீபங்கள்  காட்டி  தேங்காய்  உடைத்து  இருபக்கமும்  வைத்து  பிரார்த்திக்க வேண்டும்.                கலசத்தை  துர்கையாக  நினைத்து  துர்கை  அம்மனுக்கு  ஸ்தோத்திரம்  சொல்லி  பாடல்கள்  பாடி  திருமண

பணத்தின் அருமை பெருமை :

Image
சிந்திக்க:               பணம்  - பெருமை - அந்தஸ்து - செல்வாக்கு,  கம்பீரம்,  புகழ்  என அனைத்தையும்  தருகிறது.  அதனால் பணத்திற்கு  முக்கியத்துவம்  நம்  முன்னோர்கள், மூதாதையர்கள்  என  அனைவரும்  மரியாதை  கொடுத்து  கடைசியில்  நாம்  பணத்திற்கு  முக்கியத்துவம்  தருவதை  விட்டுவிட்டு  அதில்  மிதப்பவர்களுக்கு  முக்கியத்துவம்  தர ஆரம்பித்துவிட்டோம்.                    பணத்தின் பெயர்  சொல்லி  பல  பழமொழிகள்  உதாரணத்திற்கு  வந்துவிட்டது.     அதில் சில            '' பணம் உள்ளவன் பாட்டாளி                பணம்  பாதாளம் வரை பாயும்                 பணம் இல்லை என்றால் நீ செல்லா      காசு                              பணம் பந்தியிலே                 பணம்   இல்லை என்றால்  உன்னை  ஒருவருக்கும் தெரியாது               பணம்  இருப்பவர்கள்  வீட்டில்  பிணம் கூட அழகு " என்று  பிள்ளைகள்  வளரத்  தொடங்கும்  முன்பே  பணத்தின்  அருமை  பெருமைகளைச்   சொல்லி  சொல்லி   பணம்  தேடல்  என்னும்  விதை  எல்லோர்  மனதிலும்  நுழைந்தாகிவிட்டது.   விளைவு:                 பணத்திற்காக  அதை  அடைவதற்காக