தொடர் வியாதி -- பரிகாரங்கள்
தொடர் வியாதியால் துன்பப் படுபவர்களுக்கு எளிய பரிகாரங்கள்:
உங்கள் மனம் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
- உங்களுக்கு வியாதி இருக்கிறது என்பதை மறந்து விடுங்கள்.
- கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்து நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இந்த சரீரத்தில் இருக்கும் உயிரான நீ எப்போதும் என்னில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் உடலானது என்னுள் இருக்கும் இந்த உயிரைப் போற்றி பாதுகாக்கும் என்று சொல்லுங்கள்.
- உங்களுக்கு எது கிடைக்கவில்லையோ அவற்றை எண்ணி வருந்தாமல் அந்த எண்ணத்தை தொலைத்துவிடுங்கள் .
- வீட்டில் காலை மாலை பூஜை அறையிலும் வாசலிலும் வரவேற்பு அறையிலும் விளக்குகள் ஏற்றுங்கள்.
- தன்வந்தரி ஸ்தோத்திரம் தவறாது சொல்லுங்கள்.
- மரண பயம் வந்துவிட்டால் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
- கண்டிப்பாக த்யானம் செய்யுங்கள்
- நவகிரஹ பரிகாரங்கள், அர்ச்சனை, வலம் வருதல் தொடர்ந்து செய்யலாம்.
- சுதர்க்ஷனரை நெய் விளக்கேற்றி வழிபடலாம்.
- உங்கள் குல தெய்வ வழிபாடு மறவாமல் செய்ய வேண்டும்.
- உங்கள் பெற்றோர்களை எப்போதும் வாழும் தெய்வங்களாக பார்க்க வேண்டும். அவர்களிடம் குறைகள் இருந்தாலும் பெரிது படுத்தாமல் வணங்குங்கள்.
- படிப்படியாக வினைப்பயன் குறைந்து நலம் கூடும். மகிழ்ச்சி அடையலாம்.
Comments
Post a Comment