சிந்தனைக்கு
காலத்தால் ஏற்படும் மாற்றத்தால் நாம் இழந்தவைகள் ஏராளம். தவறவிட்டதும், தொலைத்து விட்டதும் ஏராளம் ..
இப்போதுள்ள உறவுகளில் குடும்பத்திலும் சரி வெளி உலக வாழ்விலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. பந்தம், சொந்தம், பாசம், அன்பு, தோழமை, நட்பு, கனிவு, இரக்கம், கருணை இவை அனைத்தும் சக உறவுகளிடம் காட்ட நேரம் இல்லாமல் இருப்பது போல் தான் இருக்கிறோம்.
ஆத்மார்த்தமான அன்பு புரிதலை இயந்திரத் தனமாகிவிட்டோம்.
வாழ்க்கை மேலோட்டமாகவே சென்று கொண்டு இருக்கிறது.
விளைவு:
ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆத்மதிருப்தி, சந்தோஷம் தொலைந்து போலி முகத்திரையை போட்டுக் கொண்டு புன்னைகையுடன் வாழவதை பார்க்க முடிகிறது. இதை காணும் நேரத்தில் மனம் கனக்கிறது.
Comments
Post a Comment