ஶ்ரீமத் பாகவதத்தின் பெருமை

ஶ்ரீமத் பாகவதத்தின் பெருமை:


       ஶ்ரீமத் பாகவதத்தின் பெருமை - சொல்லில் அடங்காது

       ஶ்ரீகிருஷ்ணரே நான் வேறல்ல ஶ்ரீமத் பாகவதம் வேறல்ல. நான் இதில் வாசம் செய்கிறேன் என்று அவரே சொல்லிருக்கிறார். அவ்வளவு பெருமை மிக்கது இந்த புராணம்.
        
           இந்த பாகவத புராணம் வீட்டில் இருந்தாலே நம் சகல குற்றங்களும் கரைந்துவிடும். பூஜை அறையில் வைத்து பூஜிக்க படவேண்டும். இறைவனே நம்முடன் இருப்பதாக உணரலாம். 

           இந்த ஶ்ரீமத் பாகவதத்தை பரீட்சித்து மகராஜா - (அபிமன்யு மகன் அர்ஜுனனின் பேரன்) தனக்கு தட்சகன் எனும் நாகம் தீண்டி மரணம் எனத் தெரிந்தவுடன் இந்த புத்தகத்தை சுகாச்சாரியாரைக் கொண்டு பல வேத விற்பன்னர்களைக் கொண்டு ஓதச் செய்து நற்கதி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. வானில் உள்ள தேவர்கள் புடைசூழ வந்து அவரை அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.


        உயிர் நற்கதி அடையவும் இது உயர்ந்த வழியாகப் போற்றப்படுகிறது.

அடுத்து::செல்வம் சேர

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்