நாமும் நாம் வசிக்கும் வீடும் - தொடர்ச்சி
தொடர்ச்சி
முதலில் நாம் நம்மை நம் தூய எண்ணங்களால் தற்காத்துக் கொள்வோம்.
எப்படி,
காலை பிரார்த்தனை
காலை எழுந்தவுடன்,
நம் இரு உள்ளங்கைகளையும் பார்த்து வணங்க வேண்டும்.
நம்மை நாமே ஆசிர்வதித்துக் கொள்ள வேண்டும்.
பின்,
இந்த நாள் எனக்கு மிகவும் நல்ல நாளாக அமையப்போகிறது. என்னுள் இருக்கும் இறை எனக்கு வரப்போகும் தீயவைகளை நீக்கி நல்லன எல்லாம் தருவார் என்று மனதார பிரார்த்திக்க வேண்டும்.
ஓம் ஶ்ரீஹரி (அ) ஓம் நமோ நாராயணா (அ) நமசிவாய என்று உங்களுக்கு பிடித்த மந்திரங்கள் சொல்லி உங்கள் தினசரி கடமைகளை துவக்குங்கள்.
என்னை கைப்பிடித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை வழிநடத்திச் செல்லுங்கள் என வேண்டுங்கள்.
எல்லாம் நலமாக நடக்கும். வாழ்வில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நம் இதயத்தின் அருகே கை வைத்து நாம் இந்த மந்திரச் சொற்களைச் சொல்வோம்.
"மனமே கலங்காதிரு உனக்கு நலம் செயக் கருதி இது சொல்லுவேன் பொய்யில்லை எல்லாம் அளிக்கும் இறை உனையும் காக்கும் என்ற சொல்லால் அழியும் துயர்"
என்று பிரார்த்திப்போம்.
அடுத்து::சூரிய தேவன்
Comments
Post a Comment