நாமும் நாம் வசிக்கும் வீடும் :

நாமும் நாம் வசிக்கும் வீடும் :


          வசிக்கும் வீட்டில் வாஸ்து புருஷன் இருப்பதால் எப்போதும்  சுப வார்த்தைகளையே பேச வேண்டும்.

" ஓம் அனுக்ரஹ ரூபாய பூமி புத்ராய வித்மஹே தீமஹி தந்நோ வாஸ்து தேவ மூர்த்தி ப்ரசோதயாத்"


என்று தினமும் 3 முறை சொல்லி வந்தால் வாஸ்து தோஷங்கள் வராது.

          அது தவிர நம் வீட்டு தலைவாசலில் கிரக தேவதையாக ஒவ்வொரு வீட்டுக்கும் வாசம் கொண்டுள்ளார்.



           "ததாஸ்து ததாஸ்து" என்று நம் வீட்டில் எப்போதும் வாஸ்து தேவ மூர்த்தி உச்சரித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

            நாம் நல்லதை பேசும் போதும் தீயதை பேசும் போதும் அந்த நேரத்தில் ததாஸ்து ( அப்படியே ஆகட்டும்) என்று சொல்லி விட்டால் அது அதன்படியே நடந்துவிடும். தினம் தினம் அந்த எண்ண அலைகள் நம் வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் தான் நாம் வீட்டை தூய்மைப்படுத்தி புகை போட்டு தீய எண்ண அலைகளையும், திருஷ்டி பார்வைகளின் தாக்குதலையும் நீக்கிக் கொள்ள வேண்டும்.

              நல்லவற்றை பேசி, நல்லதையே நினைத்தோம் என்றால் அந்த எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்.



               இப்போது " பாஸிட்டிவ் எனர்ஜி" என்று சொல்கிறோம்.


அடுத்து::நாமும் நாம் வசிக்கும் வீடும் தொடர்ச்சி



Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்