மனிதர்கள் - மனம்:
மனிதர்கள் - மனம்:
நமது மனமானது மலரிலுள்ள தேனை மட்டும் உறிஞ்சும் தேனீக்களைப் போல் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஈக்களைப் போல் வாழ ஆசை படக்கூடாது ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கும். அறுசுவை உணவின் மீதும் அமரும், தூய்மை அற்ற இடங்களிலும் வேறுபாடு இல்லாமல் இருக்கும்.
மஹான்கள், ஞானிகள் தேனீக்களை போன்றவர்கள். மனிதர்கள் ஈக்களைப் போல இருந்தாலும் அதிலிருந்து வெளியில் வர பழக வேண்டும்.
தன்மை-- இயல்பு
சில நேரங்களில் நம்மிடை உயரிய பண்புகள் தோன்றும் பல நேரங்களில் சிறுமை, கோபம், பொறாமை, புறம் கூறுதல் போன்ற குணங்களும் காணப்படும். உயரிய பண்புகளான அஹிம்சை, உண்மை, பக்தி, ஒழுக்கம், நா- நயம், சத்தியம் பேசுதல் போன்றவை தோன்றத் தோன்ற சிறுமையான குணங்கள் நம்மை விட்டு சிறிது சிறிதாக போய்விடும்.
உடல் மனம் புத்தி எண்ணம் செயல் என அனைத்தும் பவித்ரமாகி நாமும் தெய்வ நிலைக்கு உயரலாம்.
ஜகத்துக்கெல்லாம் தாய் தகப்பனாய் இருக்கிற பார்வதி பரமேசுவரரை [ அவரவர் இஷ்ட தெய்வங்களை ] ஸ்மரித்துக் கொண்டிருந்து,
"ஜகத்: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ" என்று சரண் அடைய வேண்டும்.
Comments
Post a Comment