அனுபவத்தில் பலரும் பலன் கண்ட மந்திரங்கள்
வாழ்க்கையில் சரிவு வராமலிருக்க ஸ்லோகம்
ஓம் தத் ஸவித்தும் வரம் ரூபம் ஜோதிஹ் பரஸ்ஸ தீஹ யத்யஹ் ஸத்யேன தீபயோத்.
தினமும் 27 தடவை மனதில் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும்.
குழந்தைகள் முரட்டுத் தனம், பிடிவாத குணம் மாற
கணபதி - வழிபாடு
21 எண்ணிக்கை - ஏலக்காய் கோர்த்த மாலை
18 வாரம் - வியாழன் தோறும் குழந்தை பேருக்கு அர்ச்சனை
9 முறை - ஆலயத்தை சுற்றி வலம் வருதல்
18 ஆவது வார முடிவில் - அர்ச்சனை, சுண்டல் நிவேதனம்.
படிப்படியாக பிள்ளைகளிடம் மாற்றம் தெரிவதைக் கண்கூடாகக் காணலாம்.
விருப்பங்கள் நிறைவேற
ஆஞ்சநேயர் வழிபாடு
9 வாரம் - சனிக்கிழமை வெற்றிலை மாலை
45 (அ) 108 எண்ணிக்கையில் - வெற்றிலை மாலை
9 வார முடிவில் - வடை மாலை, செந்தூரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு.
ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள் தொடர்ந்து படித்து வரவும்.
தோஷங்கள் அகல
பைரவரின் வாகனமான நாய்க்கு - நெய் சேர்த்த கோதுமை சப்பாத்தி - தினசரி
ஒன்பது ஒரு ரூபாய் நாணயம் - தானம் - மாதத்திற்கு ஒரு முறை.
கடும் தோஷங்கள் விலக
நாள் - செவ்வாய், வியாழன், சனி
இடம் - சிவன் கோயில் குளக்கரை
செய்ய வேண்டியது - கறுப்பு எள் கால் கிலோ அளவில் வாங்கி ஒரு கையில் வைத்துக் கொண்டு அதன் மேல் நம் மற்றொரு கையை வைத்து
" காக்கை வாகனனே
கடும் தோஷம் நீக்குபவனே
நோக்கும் தீயவைகளும்
நடுக்கும் நட்டங்களும்
நில்லாமல் நீங்கிட
நீலமேனியனே நீ அருளிடுவாய்"
பின் சிவபெருமானை தரிசனம் செய்து வரவும்.
உங்களிடம் உள்ள பாதிப்புகள் படிப்படியாக விலகுவதை கண்டிப்பாகக் காணலாம்.
அடுத்து:: தேகம் கவசம் கொண்டு காக்க
அடுத்து:: தேகம் கவசம் கொண்டு காக்க
Comments
Post a Comment