Posts

Showing posts from June, 2018

சூரிய தேவன்

Image
நவகோள்களின் நாயகன்:               மற்றுமொரு உயர்ந்த மந்திரங்களுள் ஒன்றானதை சூரிய பகவானுக்கு  சமர்ப்பணம் செய்வோமா. சூரியன் நவகோள்களில் -   முதன்மையானவர் கிரகங்களின் - இராஜா இராசியில்  -  சிம்ஹம் இரத்தினங்களில்  -  மாணிக்கம் கிழமைகளில்  -  ஞாயிறு                 இவருக்கு பல பெயர்கள் உண்டு. இவர் புகழ் பாட சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம் எனப் பலப்பல.                   அவற்றுள் உங்களுக்குத் தர இருப்பது அவரின் மிக உயர்ந்த 21 நாமங்களை கொண்ட மந்திரம்.                   இந்த நாமங்கள் மிகவும் விசேஷம் ஆனவை. தனித்துவம் மிக்கது. " ஆதித்யாய ", " சூர்யாய " என்று எவ்வளவு தான் இருந்தாலும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் சூரியனைப் போல் நாமும் பிரகாசமாக இருப்போம். நாம் என்றும் ' இருளில் ' விழமாட்டோம். ஓம் விகர்த்தனோ விவஸ்வாம்ஸ மார்த்தண்டோ பாஸ்கரோ இரவி லோகப்ரஹாஸக ஶ்ரீமான் லோகஸஸுர் கிரகேச்வர லோகசாஷி த்ரிலோகேச கர்த்தா ஹர்த்தா தமிஸ்ரஹா தபனஸ் தாபனஸ் ஸைவசுசி ஸப்தாச்வ வாஹன சுபஸ்தி ஹஸ்தோ ப்ரம்மாஸ ஸர்வதேவ நமஸ்க்ருத என்று அனுதினமும் வணங்கி வாழ்வில் ப்ரகா

நாமும் நாம் வசிக்கும் வீடும் - தொடர்ச்சி

Image
தொடர்ச்சி               முதலில் நாம் நம்மை நம் தூய எண்ணங்களால் தற்காத்துக் கொள்வோம். எப்படி, காலை பிரார்த்தனை காலை எழுந்தவுடன்,      நம் இரு உள்ளங்கைகளையும் பார்த்து வணங்க வேண்டும்.      ‎    நம்மை நாமே ஆசிர்வதித்துக் கொள்ள வேண்டும்.      ‎பின்,      ‎   இந்த நாள் எனக்கு மிகவும் நல்ல நாளாக அமையப்போகிறது. என்னுள் இருக்கும் இறை எனக்கு வரப்போகும் தீயவைகளை நீக்கி நல்லன எல்லாம் தருவார் என்று மனதார பிரார்த்திக்க வேண்டும்.               ஓம் ஶ்ரீஹரி (அ) ஓம் நமோ நாராயணா (அ) நமசிவாய என்று உங்களுக்கு பிடித்த மந்திரங்கள் சொல்லி உங்கள் தினசரி கடமைகளை துவக்குங்கள்.               என்னை கைப்பிடித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை வழிநடத்திச் செல்லுங்கள் என வேண்டுங்கள்.              எல்லாம் நலமாக நடக்கும். வாழ்வில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.              நம் இதயத்தின் அருகே கை வைத்து நாம் இந்த மந்திரச் சொற்களைச் சொல்வோம். "மனமே கலங்காதிரு உனக்கு நலம் செயக் கருதி இது சொல்லுவேன் பொய்யில்லை எல்லாம் அளிக்கும் இறை உனையும் காக்கும் என்ற சொல்லால் அழியும் துயர்"

நாமும் நாம் வசிக்கும் வீடும் :

Image
நாமும் நாம் வசிக்கும் வீடும் :           வசிக்கும் வீட்டில் வாஸ்து புருஷன் இருப்பதால் எப்போதும்  சுப வார்த்தைகளையே பேச வேண்டும். " ஓம் அனுக்ரஹ ரூபாய பூமி புத்ராய வித்மஹே தீமஹி தந்நோ வாஸ்து தேவ மூர்த்தி ப்ரசோதயாத்" என்று தினமும் 3 முறை சொல்லி வந்தால் வாஸ்து தோஷங்கள் வராது.           அது தவிர நம் வீட்டு தலைவாசலில் கிரக தேவதையாக ஒவ்வொரு வீட்டுக்கும் வாசம் கொண்டுள்ளார்.            " ததாஸ்து ததாஸ்து " என்று நம் வீட்டில் எப்போதும் வாஸ்து தேவ மூர்த்தி உச்சரித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.             நாம் நல்லதை பேசும் போதும் தீயதை பேசும் போதும் அந்த நேரத்தில் ததாஸ்து ( அப்படியே ஆகட்டும் ) என்று சொல்லி விட்டால் அது அதன்படியே நடந்துவிடும். தினம் தினம் அந்த எண்ண அலைகள் நம் வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் தான் நாம் வீட்டை தூய்மைப்படுத்தி புகை போட்டு தீய எண்ண அலைகளையும், திருஷ்டி பார்வைகளின் தாக்குதலையும் நீக்கிக் கொள்ள வேண்டும்.               நல்லவற்றை பேசி, நல்லதையே நினைத்தோம் என்றால் அந்த எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்.      

சிந்தனைக்கு:

Image
சில நிமிடங்கள்         நம் நலம் விழைபவர்கள், நமக்காக அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்பவர்கள், நம் வளர்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்பவர்கள் இவர்களின் மனத்தை மட்டும் அறியாமல் கூட கஷ்டப்படுத்தக் கூடாது.         நம் மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு ஒரு நாளும் நாம் துரோகம் கனவிலும் செய்யக்கூடாது.        அது பெரும் பாவத்தை விட கொடிய பாவமாக கருதப்படுகிறது. அடுத்து::நாமும் நாம் வசிக்கும் வீடும்

செல்வம் சேர

Image
சௌபாக்கியலஷ்மி மந்திரம்: ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் ஜகத் ப்ரஸுத்யை சௌபாக்கியலஷ்ம்யை இராஜ்யை தாத்யை நமஹ: ஸ்வாகா: மஹாலஷ்மி மந்திரம்: ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஸீம் கமலே கமலாலயே ஶ்ரீத ப்ரஸீத ப்ரஸீத ஶ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலஸ்ம்யை நமஹ; ஓம் மஹாதேவ்யை ஸ வித்மஹே  விஷ்ணு பத்ன்யை ஸ தீமஹீ  தந்நோ லஷ்மீ ப்ரசோதயாத். ஶ்ரீ மஹாலஷ்மி ப்ரசாதம்  ஶ்ரீ மஹாலஷ்ம்யைர் பணமஷ்து ;             வெள்ளிக்கிழமை காலை 6 - 7 மணிக்குள் மஹாலஷ்மியின் திருவுருவப்படத்திற்கு மஞ்சள் குங்குமம், பூக்களால் அலங்கரித்து பழம், பூ, வெற்றிலைபாக்கு, ஏலக்காய் பால், கல்கண்டு, சர்க்கரைப் பொங்கல் வைத்து தூப தீபங்கள் காட்டி இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்து வர ஶ்ரீலஷ்மி அந்த இல்லத்தில் வாசம் செய்வாள். அடுத்து::சிந்தனைக்கு

ஶ்ரீமத் பாகவதத்தின் பெருமை

Image
ஶ்ரீமத் பாகவதத்தின் பெருமை:        ஶ்ரீமத் பாகவதத்தின் பெருமை - சொல்லில் அடங்காது .         ஶ்ரீகிருஷ்ணரே நான் வேறல்ல ஶ்ரீமத் பாகவதம் வேறல்ல. நான் இதில் வாசம் செய்கிறேன் என்று அவரே சொல்லிருக்கிறார். அவ்வளவு பெருமை மிக்கது இந்த புராணம்.                     இந்த பாகவத புராணம் வீட்டில் இருந்தாலே நம் சகல குற்றங்களும் கரைந்துவிடும். பூஜை அறையில் வைத்து பூஜிக்க படவேண்டும். இறைவனே நம்முடன் இருப்பதாக உணரலாம்.             இந்த ஶ்ரீமத் பாகவதத்தை பரீட்சித்து மகராஜா - (அபிமன்யு மகன் அர்ஜுனனின் பேரன்) தனக்கு தட்சகன் எனும் நாகம் தீண்டி மரணம் எனத் தெரிந்தவுடன் இந்த புத்தகத்தை சுகாச்சாரியாரைக் கொண்டு பல வேத விற்பன்னர்களைக் கொண்டு ஓதச் செய்து நற்கதி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. வானில் உள்ள தேவர்கள் புடைசூழ வந்து அவரை அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.         உயிர் நற்கதி அடையவும் இது உயர்ந்த வழியாகப் போற்றப்படுகிறது. அடுத்து::செல்வம் சேர

பணத்தட்டுப்பாடு நீங்க

Image
பரிகாரத்திற்கு செல்வோம்: பணத்தட்டுப்பாடு நீங்க                     வெள்ளிக்கிழமை காலை 6.00 - 7.00 மணிக்கு சுக்ர ஓரையில் விநாயகர் லஷ்மி அமர்ந்த நிலையில் உள்ள படத்திற்கு எருக்கம்பூ மாலையிட்டு சில எருக்கம்பூக்களை தூவி பால் (அ) கற்கண்டு (அ) சர்க்கரைப் பொங்கல் (அ) பால் பாயாசம் இவற்றில் ஏதேனும் ஒன்று நிவேதனம் செய்து மண் அகலில் இரண்டு தீபங்கள் வெள்ளெருக்கு திரியில் நெய் போட்டு  ஏற்றி வழிபட்டு வரவும்.             மாலையில் அந்த பூக்களை எடுத்து பணப்பெட்டியில் வைக்கவும். மறு வாரம் மாற்றிவிடலாம்.                 மாற்றும் பூக்களை கால் படாத இடத்தில் போட்டுவிடவும். பணமுடை நீங்குவதை கண்கூடாகக் காணலாம். அடுத்து::ஸ்ரீமத்பாகவதத்தின் பெருமை

உறவுகள்

Image
                                                   உறவுகளைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் சொல்லிக் கொண்டே போகலாம். உறவுகள் வாழ்வின் ஆதாரம், நம்பிக்கை. ஒரு மரத்தின் வேர் போன்றது. வேர்கள் ஆரோக்கியமாகவும் உறுதியுடன் இருந்தால் மட்டுமே மரம் செழுமையாக இருக்க முடியும். விழுதுகள், மரத்தை தாங்கலாம். அதுவே மரத்தை வளர்க்க முடியாது. "விழுதுகள் வேரூன்ற மரத்தின் 'வளம்' குன்ற ஆரம்பித்துவிடும் ". உறவுகளும் அப்படித்தான்:                               தகப்பன் சொல் கேளா பிள்ளைகளிடம் தன்னடக்கம் இருக்காது. தான் தோன்றி தனமாக வாழ்வார்கள்.                               தாயின் பாசம் உலகில் உயர்ந்தது. அதற்கு நிகர் வேறில்லை.                                         தாரத்தின் அன்பு வேறெங்கும் கிடைக்கக் கூடியதில்லை.                               கணவன் கெட்டுப் போனாலும் மனைவியின் கண்ணீர் பலம் கூட்டும்.  உலகை புரிந்து வாழ்ந்து உயர்வடைவோம். அம்மை அப்பன் பாதம் போற்றி ஆனை முகன் பாதம் போற்றி குருநாதர்கள் பாதம் போற்றி பதினென் சித்தர்கள் பாதம் போற்றி என் குல த

சிந்தனைக்கு

Image
                      காலத்தால் ஏற்படும் மாற்றத்தால் நாம் இழந்தவைகள் ஏராளம். தவறவிட்டதும், தொலைத்து விட்டதும் ஏராளம் ..                       இப்போதுள்ள உறவுகளில் குடும்பத்திலும் சரி வெளி உலக வாழ்விலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. பந்தம், சொந்தம், பாசம், அன்பு, தோழமை, நட்பு, கனிவு, இரக்கம், கருணை இவை அனைத்தும் சக உறவுகளிடம் காட்ட நேரம் இல்லாமல் இருப்பது போல் தான் இருக்கிறோம்.                      ஆத்மார்த்தமான அன்பு புரிதலை இயந்திரத் தனமாகிவிட்டோம்.                      வாழ்க்கை மேலோட்டமாகவே சென்று கொண்டு இருக்கிறது. விளைவு:                        ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆத்மதிருப்தி, சந்தோஷம் தொலைந்து போலி முகத்திரையை போட்டுக் கொண்டு புன்னைகையுடன் வாழவதை பார்க்க முடிகிறது. இதை காணும் நேரத்தில் மனம் கனக்கிறது. அடுத்து:: உறவுகள் மேம்பட