Posts

Showing posts from November, 2019

பக்தி நெறி

Image
பக்தி நெறி              பக்தியில் பல வகைகள் உண்டு எண்ணிலடங்கா. பக்தி என்பது நாம் செலுத்துவது. அதில் "சரணாகதி"த்துவம் உயரியதாகக் கருதப்படுகிறது.             எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இறைவனின் தாளினை பற்றிட வேண்டும் என்ற அன்பு மட்டும் கொண்டு நீயே "கதி" என முழுவதுமாக சரண் அடைதல் மிக உயரிய பக்தி.            எவ்வளவு தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பலப்பல பட்டங்கள் பெற்றாலும் புகழ், மேன்மை என அனைத்தும் இருந்தாலும் நாம் இறைவனிடம் "பக்தி" செலுத்தவில்லை என்றால் "நன்றி" செலுத்தவில்லை என்றால் இந்த மானுடப்பிறவி இந்த பிறவியில் வீண் என உணர வேண்டும்.        தெய்வப் புலவர் - திருவள்ளுவர்    "திருக்குறளில் கடவுள் வாழ்த்து" பகுதியில் இதனை தெளிவு படக் கூறியுள்ளார். " பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்     இறைவன்  அடிசேரா தார்" இவரே தெய்வப் புலவர் அல்லவா!  " கற்றதனால் ஆய  பயனென்கொல்  வாலறிவன்    நற்றாள் தொழாஅர்  எனின்."  

சனீஸ்வரர்:

Image
சனீஸ்வரர்:           நவகோள்களில் ஈஸ்வரர் பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.          நவகிரகங்களில் சனிபகவான் "நீதி" தவறாதவர். அவரவர் "கர்ம" வினைகளுக்கு உரிய பலனைத் தவறாமல் வழங்குபவர். நம்மில் பலருக்கும் "சனி" எனும் பெயரைக் கேட்டதுமே பயம் தொற்றிக் கொள்ளும். அது தேவையே இல்லை. "ஆயுள் காரகன்" எனப்படும் சனிபகவான் கருணை வள்ளல்.           முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத்  தந்து நம் பாவச்  சுமைகளை  களைக்கும் கிரகநாதன் இவர்.             ஒன்பது கிரகங்களில் "சந்திரன்" மிக வேகமாகச் சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் இரண்டே கால் நாட்கள் தான் இருப்பார் . ஆனால்  சனீஸ்வரர் மெதுவாகச் சுற்றுவார். ஒரு கட்டத்தை [ இராசியை] கடக்க இரண்டரை வருடம் எடுத்துக் கொள்வார். "மந்தன்" எனப் பெயரும் உண்டு.             சனீஸ்வரருக்கு ஒரு கால் பலவீனமானது. எப்படி எதனால் என்றால்               இராவணன் தன மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெறவேண்டும் என்பதற்காக தன தவத்தின் வலிமையால் நவகிரகங்களான

திரிதியை

Image
திரிதியை :           வருடம் தோறும் வரும் " அக்ஷய திரிதியை " அன்று புனித நாளாக கருதி வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். அன்று நம்மால் முடிந்த அளவுக்கு தானங்கள் செய்வது சிறப்பு. அன்று மனமார தானம் செய்தால் எப்போதும் யாரிடமும் தானம் பெறாத நிலையில் நாம் வாழலாம்.       பூக்கள், காசு, வெள்ளி நாணயங்கள், உடைகள், தானியங்கள், இனிப்பு வகைகள், உணவு வகைகள் என முடியும் அளவுக்கு தானங்கள் செய்யலாம். பல மடங்காக இறைவன் உங்களுக்கு அருளுவார். குறிப்பு:  எதையும் எதிர்பார்க்காமல் தானம் செய்ய வேண்டும். விசேஷம் : அன்று வீட்டில் பல்லியைக்  கண்டால் மிகவும் விசேஷமாக கருதப் படுகிறது. 

கிரிவலம்

Image
கிரிவலம்            வாழ்க்கையில் கடினமாக "உழைத்து, உழைத்து" உயர்வடைய முடியாமல் மாற்றங்கள் வராமல் இருப்பின்         " சனிக்கிழமை, மகம் நக்ஷத்திரத்துடன் கூடிய நாளில் பௌர்ணமி " வரும் போது ஒரே ஒரு முறை மட்டுமாவது கிரிவலம் வந்தால் கூட அவல  நிலை மாறி உயர் நிலை அடைவார்கள்.                                 கிரிவலம் செய்யும்போது பக்தியோடு மௌனமாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே சென்று வரவும்.          மாற்றங்கள் விரைவில் நடக்கும்.

சாஸ்த்திரம்: சம்பிரதாயம்:

Image
சாஸ்த்திரம்: சம்பிரதாயம்:      சாஸ்த்திரங்கள் என்றும் மாறாத தன்மையுடையவை. இந்து மத சாஸ்த்திரங்கள் எண்ணிலடங்கா. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கை நெறிகளை நேர்ப்படுத்தி  வாழ்வது கடினமாகிறது. ஓரளவுக்கு முடிந்தவரை பின்பற்றலாம். ஆனால் எப்போதும் மீறி நடக்கக்கூடாது. சம்பிரதாயங்கள்:                            இது மனிதர்களாகிய நாமே ஏற்படுத்திக் கொண்டது. மூதாதையர்கள், முன்னோர்கள் வகுத்த பாதையில் சம்பிரதாயங்களை மேற்கொண்டு வாழ்வதே. இது நமக்கு ஏற்றாற்போல், காலச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறும். மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். எப்போதும் முன்னோக்கிப் போகாமல் பிற்காலத்தையும் கருத்தில்க்  கொண்டு சம்பிரதாயங்களின் அடிப்படை மட்டும் எப்போதும் மாறாமல் பின்பற்ற வேண்டும்.  

ஆத்திகம் நாத்திகம்

Image
  ஆத்திகம் -- நாத்திகம் :          ஆதிக்  காலத்தில்   மனிதன் இயற்கையையும்,  அதன்  பேராற்றலும்  கண்டு  பணிந்து  வணங்கத்  துவங்கியது  பக்தியாக  கருதப்பட்டது.  முதல் கடவுளாக சூர்ய  பகவானையே  வழிபட்டனர்.  பஞ்ச  பூத  வழிபாடு: பின்னாளில்  பரிணாமங்கள்  வளர்ந்து  வளர்ந்து  உருவங்கள்  கொடுத்து  மனமுருகி  அதற்கான  குறியீடுகளும்  கொடுத்து  வணங்கினால்  நல்  வாழ்வு  பெறலாம்  என்ற  எண்ணத்தில்  இறைவனுக்கு  ஆகிருதி  அதாவது  படையல்  பூசைகள்,  யாகவேள்விகள்,  சடங்கு,  சாஸ்திரம், சம்பிரதாயம்  என  ஒவ்வொன்றாய்  உருவாக்கப்பட்டது.  இப்படியே  ஆலயங்கள்  எழுதப்பட்டதாக  வரலாறு. மதங்கள் :        பக்தியை  விட  அதிகமாக  இறைவனைச்  சுற்றி  மனிதர்களால்  கட்டமைக்கப்பட்ட  இந்த  கோட்பாடுகளின்  ஸ்தாபனங்கள்  தீவிரமடைந்து  மதம்  என  பெயர்  பெற்றது. விளைவு: இதை  ஏற்றுக்  கொண்டவர்கள்  -  ஆத்திகர்கள்  வினாக்களை  எழுப்பியவர்கள் -  நாத்திகர்கள்    அடுத்து::மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும் 

மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்

Image
மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்: [மான் - பாலை வனம்]           பாலைவனத்து  மணலில் ஓடும் மான் கானல் நீரை நீரென எண்ணி ஓடும்.              மாந்தர்களும் பூவுலக வாழ்க்கையை நிஜம் என்று நம்பி மூழ்கி புலன்களில் தோற்றுப்  போய் வீழ்கிறார்கள் .                    மனதை மேல்நிலைக்கு இறைவனை அடைய கொண்டு சென்றவர்கள் இந்த " பூவுலக " வாழ்க்கையில் மயங்குவதில்லை. மெய்ப் பொருளை மட்டுமே நம்புவார்கள்.        கானல் நீரை நிஜம் என்று நம்பும் மான் ஓடிக் கொண்டே தான் இருக்கும். கானல் நீரும் தள்ளித் தள்ளி போய்க்  கொண்டே இருக்கும்.         முடிவில் நீர்க் கிடைக்காத மான் தளர்ந்துவிடும். மனிதர்கள்  வாழ்க்கையும் கானல் நீரை நம்பி ஓடும் மான் போல தான்.          மெய்ப்பொருள் என்ன என்று அறியாமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது.    அடுத்து:: மனிதர்கள் - மனம்  

சிந்தனைக்கு

Image
சிந்தனைக்கு :      நம்மை கடந்து போகும் ஒவ்வொரு மனிதர்களிடமும் நாம் கற்றுக் கொள்ள ஒரு செய்தி இருக்கிறது. அதை உணர்வதிலும் தெளிவதிலும் தான் வாழ்க்கை இருக்கிறது. ஒருவரை போல் இன்னொருவர் இருக்க முடியாது. உதாரணம் :                         பாண்டவர்கள் ஐவரில் எல்லோரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள். கௌரவர்களும் ஒவ்வொரு விதமான நாயகர்கள்.     இதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பார்க்கக் கூடாது, ஒவ்வொருவரும் நற்குணங்களில் மாறுபட்டு மிகுதியாகவோ, குறைவாகவோ நற்பண்புகளைப்  பெற்றவர்களே.    அடுத்து:: ஆத்திகம் நாத்திகம் 

மனிதர்கள் - மனம்:

Image
மனிதர்கள் -  மனம்:                  மனிதர்கள் நாம் நமக்குள்ளும் நிறைய முகங்கள், நிறைய குணங்கள் உண்டு. உள்ளம் ஒன்று, எண்ணங்கள் வேறுவேறு நாம் சிலருக்கு நல்லவர்களாகத்  தெரிவோம். பலருக்கு வேண்டப்படாதவர்களாக இருப்போம். இது இயல்பு.               நமது மனமானது மலரிலுள்ள தேனை மட்டும் உறிஞ்சும் தேனீக்களைப் போல் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஈக்களைப்   போல் வாழ ஆசை படக்கூடாது ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கும். அறுசுவை உணவின் மீதும் அமரும், தூய்மை அற்ற இடங்களிலும் வேறுபாடு இல்லாமல் இருக்கும்.                 மஹான்கள், ஞானிகள் தேனீக்களை போன்றவர்கள். மனிதர்கள் ஈக்களைப் போல இருந்தாலும் அதிலிருந்து வெளியில் வர பழக வேண்டும். தன்மை-- இயல்பு               சில நேரங்களில் நம்மிடை உயரிய பண்புகள்  தோன்றும் பல நேரங்களில் சிறுமை, கோபம், பொறாமை, புறம் கூறுதல் போன்ற குணங்களும் காணப்படும். உயரிய பண்புகளான அஹிம்சை, உண்மை, பக்தி, ஒழுக்கம், நா- நயம், சத்தியம் பேசுதல் போன்றவை தோன்றத்  தோன்ற சிறுமையான குணங்கள் நம்மை விட்டு சிறிது சிறிதாக போய்விடும்.            உடல் மனம் புத்தி எண்ணம்