Posts

Showing posts from August, 2018

தானம் -- தர்மம்

Image
தானம்:         தானம்  என்பது  மற்றவர்களுக்கு  அள்ளி   அள்ளி   கொடுப்பது. உதாரணம் : கர்ணன் :                 தன்னிடம்  வருவோர்க்கு  இல்லை  என்று  கூறாமல்  தானம்  செய்து  சரித்திரத்தில்  கொடை  வள்ளல்  என  நீங்கா  பெயர் பெற்று  தானத்திற்கு  கர்ணனே    சான்று  என்று  வாழ்ந்து  காட்டியவர். தர்மம் [ அறம் ]: உதாரணம்: யுதிஷ்டிரன் [ தர்ம  மகாராஜா ]  பாண்டவர்களில்  மூத்தவர்.            அறத்தின்  வழி  வாழ்ந்து  காட்டியவர்.               தர்மம்  --  வடமொழிச்  சொல்             அறம்    --   தமிழ்ச்  சொல்.            வாழ்க்கையில்  தர்மத்தை  கடைபிடித்து  இறுதி  வரை  அறநெறி  தவறாமல்  வாழ்ந்தவர்.             யுதிஷ்டிரர்-  சூதாட்டத்தில்  தோல்வி  பெற்று   [ வஞ்சகத்தால் ]  அஸ்தினாபுரத்தை  விட்டு  துரியோதனன்  காண்டவ  வனம்  என்னும்  வறண்ட  பூமிக்கு  போக உத்தரவிட்டதும்  மௌனமாக  ஏற்றுக்கொண்டார்.              பாண்டவர்கள்  நால்வரும்  சாபம், சபதம்  செய்த  போதும்  ஒரு  வார்த்தையும் [ கடுஞ்சொல் கூட ] பேசாதவர். கிருஷ்ணர்  தூதுவராக  போக  முற்படும்  போதும்  போர்  வேண்டாம்  ஐந்து  கிரா

தொடர் வியாதி -- பரிகாரங்கள்

Image
தொடர்  வியாதியால்  துன்பப்  படுபவர்களுக்கு  எளிய  பரிகாரங்கள்:                 உங்கள்   மனம்  அமைதியாக  இருக்க  முயற்சி  செய்யுங்கள்.             உங்களுக்கு  வியாதி  இருக்கிறது  என்பதை  மறந்து விடுங்கள்.            கண்ணாடியில்  உங்கள்  உருவத்தைப்  பார்த்து  நான்  உன்னை  மிகவும்  நேசிக்கிறேன்.  இந்த  சரீரத்தில்  இருக்கும்  உயிரான  நீ  எப்போதும்  என்னில்  மகிழ்ச்சியாக  இருக்க  வேண்டும்.  என்  உடலானது  என்னுள்  இருக்கும்  இந்த  உயிரைப்  போற்றி  பாதுகாக்கும்  என்று  சொல்லுங்கள்.              உங்களுக்கு  எது கிடைக்கவில்லையோ  அவற்றை  எண்ணி  வருந்தாமல்  அந்த  எண்ணத்தை  தொலைத்துவிடுங்கள் .              வீட்டில்  காலை மாலை  பூஜை  அறையிலும்  வாசலிலும்  வரவேற்பு அறையிலும்  விளக்குகள்  ஏற்றுங்கள் .             தன்வந்தரி  ஸ்தோத்திரம் தவறாது சொல்லுங்கள்.            மரண பயம்  வந்துவிட்டால்  மிருத்யுஞ்ஜய  மந்திர த்தை 108 முறை சொல்லுங்கள் அல்லது  கேளுங்கள்.           கண்டிப்பாக த்யானம் செய்யுங்கள்            நவகிரஹ   பரிகாரங்கள், அர்ச்சனை,  வலம் 

தன்வந்த்ரி [ மருத்துவக் கடவுள்]

Image
இவர் -  வியாதிகளைப்  போக்குவதற்க்கென்றே  இப்பெயரைக்  கொண்டு  அழைக்கிறோம். கர்மா --  வினைப்பயன் :            சிலருக்கு  எப்போதும்  ஏதேனும்  ஒன்று  சரீரத்திற்கு  [வியாதி] வந்துக்  கொண்டே  இருக்கும்.  மருத்துவமும்  தொடர்ந்து  பார்த்துக்  கொண்டே  இருப்போம்.  இந்த  மருத்துவம்  சரியில்லை  வேறு  மருத்துவம்  என்று  இப்படி  நம்மை  மாற்றிக்  கொண்டே  இருப்போம்.             இதற்க்கு  தீர்வு  பரிகாரங்கள்  இறை  நம்பிக்கையில்  குணம் பெறலாம்.  ஏதேனும்  ஒரு  வழி  எந்த  விதத்திலாவது  உங்களைத்  தேடி  வரும்.  தன்வந்தரி  ஸ்தோத்திரம்: ஓம்  நமோ  பகவதே  வாசுதேவாய  தன்வந்த்ரயே  அம்ருத  கலச  ஹஸ்தாய  ஸர்வாமய  வினாசனாய  த்ரைலோக்ய  நாதாய  ஸ்ரீ  மஹா  விஷ்ணுவே  நமஹ: என்று  108 முறை  சொல்லுங்கள் [அ]  கேளுங்கள். தன்வந்தரி  மந்திரம்: " ஓம்  நமோ  பகவதே  மஹா  சுதர்ஸனா  வஸுதேவாய   தன்வந்த்ரயே அம்ருத  கலச  ஹஸ்தாய ஸர்வ  பய  வினாஸய ஸர்வ   ரோக  நிவாரண்ய  த்ரை   லோக்ய   பதயே  த்ரை   லோக்ய   நிதயே  ஸ்ரீ  மஹா  விஷ்ணு  ஸ்வரூப  ஸ்ரீ  தன்வந்தரி  ஸ்வரூப  ஸ்ரீ   ஸ்ரீ   ஸ்ரீ  

தமிழின் பெருமை

Image
சில  துளிகள்: " யாமறிந்த  மொழிகளிலே  தமிழ்  மொழிப்   போல்   இனிதாகிலும்  எங்கும்  காணோம்."            சங்கத்  தமிழ்  புலவர்களின்  புலமைகளை  அவர்கள்  இயற்றிய  நூல்களில்  நமக்கு  முழுவதும்  கிடைக்கவில்லை  என்றே  அறிகிறோம்.              ஓலை  சுவடிகளில்  வடிக்கப்  பெற்று  நமக்கு  இவ்வளவும்  கிடைக்க  பெற்றதே  நம்  பாக்கியம்.             இதையும்  நம்  தமிழுக்கு  தமிழ்  மண்ணுக்கு  சான்றாக  பெருமை  என  போற்றுவோம்.             தமிழ்  மொழி  சாகா  வரம்  பெற  வேண்டும்  என்பதே  தமிழ்  கற்றவர்களின்  அவா.   தமிழ்  --  அமிர்தம்  மூத்த  மொழி-- தமிழ்  இயல்,  இசை,  நாடகம்  என  இதனுள்  அடங்கும்.   பைந்தமிழ்,  தீந்தமிழ்,  அழகுத்தமிழ்  எனத்  தமிழோடு  புலவர்கள்  கவிநயம்  புனைந்து  மகிழ்வார்கள்.  தமிழ்  மொழிக்கு  நிகர் -- தமிழே  மொழிகளில்  முதன்மையான  மொழியும்  தமிழ்  படித்ததில்  கிடைத்த  தகவல்:          2000 ஆண்டுகளுக்கு  முன்பு  தோன்றிய  மொழி -- உலக மொழி          20000   ஆண்டுகளுக்கு  முன்பே  தோன்றிய  மொழி -- தமிழ்            20000  ஆண்டுகளுக்கு  மு

புலவர்கள்

Image
                  புலவர்கள் இறைவனை  வேண்டும்  போது  தமிழ்  மொழி  இரட்டிப்பு  அழகாகும்.  எதுகை - மோனை துள்ளி  விளையாடும்.                      கம்பர்  வரிசையில்  வள்ளுவர்,  தாயுமானவர்,  நக்கீரர்,  இளங்கோவடிகள்,  சீத்தலைச்  சாத்தனார்,  கோப்பெருந்தேவி  இப்படி  எண்ணிலடங்கா  புலவர்கள்  தமிழுக்குச்  சான்றாக  இருக்கிறார்கள். தாயுமானவர் --  இறைவனை  வேண்டும்  போது       பக்தி  நீ  பக்தி  காண  பலனா  நீ  பலவாச்   சொல்லும்  ஸித்தி   நீ  ஸித்தர்  காணா   திறமும்  நீ  திறமோர்  காணா   முக்தி  நீ  முக்தி  காணா   முதலும்  நீ  முதன்மையான  புத்தி   எனக்கொன்றுண்டோ  பூரானந்த   வாழ்வே  என்று   இறைஞ்சுகிறார்  இறைவனிடம். அடுத்து::தமிழின் பெருமை 

முடியாத காரியங்களை தடையின்றி முடிக்க

Image
முடியாத  காரியங்களை  தடையின்றி  முடிக்க :           இது  படித்ததில்  கிடைத்த  தகவல். எளிமையானது  பயன்  பெறுங்கள்.                       தொடர்ந்து  ஒன்பது   செவ்வாய்க்கிழமை களில்  மதியம்  1.00 -- 1.15   தொடங்கி  2.00 மணிக்குள்  செவ்வாய்  ஓரையில்  ஆஞ்சநேயர்   படத்தை  வைத்து  ஒன்பது  மண்  அகலில்  சிகப்பு  திரி  கொண்டு  விளக்கேற்றி,  ஒவ்வொரு  விளக்கிலும்  ஒரு  மிளகு  இட்டு  நெய்  தீபம்  ஏற்றி  உருளைக்கிழங்கு  வேக  வைத்து  நிவேதனமும் ,  பால்  பாயசமும்  செய்து  தூப  தீப  ஆராதனைகள்  காட்டி  தேங்காய்  உடைத்து  வழிபட்டு  வாருங்கள்.                விரதம்  இருப்பவர்கள்  சிவப்பு  நிறத்தில்  உடைகள்  அணிவது  சிறப்பு.               உண்ணா  நோன்பு  இருந்து  விரதம்  முடிக்க  வேண்டும்.                ஒன்பது  வாரம்  முடிந்த  பிறகு  ஆஞ்சநேயர்  கோவிலுக்கு  சென்று  வெற்றிலை  மாலை  போட்டு  உங்கள்  பெயருக்கு  அர்ச்சனை  செய்துவிட்டு வாருங்கள்.                முடிந்தவர்கள்  ஒன்பது  பேருக்கு  நெய்யுடன்  மிளகும்  உப்பும்  சேர்த்து  அதனுடன்  சாதத்தைக்  கலந்து  உருளைக்  கிழங்கு பொரி